குமரன் நகர் அருகே புதியதாக உதயமாகி இருக்கும் இந்த மோர் கடை சுவையில் புதுமை செய்வது மட்டுமல்லாது கடை அலங்காரத்திலேயும் கண்களுக்கும் ஜில்லென்று இருக்கிறது. சிறிய இடத்திலேயே பளிச்சென்ற பிராண்டிங்கோடு நிற்கும் இதனை துவக்கியிருப்பவர் இளைஞர் திரு.வினோத். போட்டோகிராபரான இவர் படிப்படியாக முன்னேறி காபி ஷாப் மாடலில் மோர் கடைகளை துவக்குவது தனது கனவென குறிப்பிட்டார். இருக்கும் வாய்ப்புகளை வைத்து சிறப்பாக என்ன செய்வது என்பதற்கு உதாரணமாக விளங்குகிறது இந்தக் கடை. மனமிருந்தால் மார்க்கமுண்டு!
Tags : Buttermilk Shop at Kumaran Nagar, Kolathur, Kolathur Mail, Kolathur Times, Local News