Showing posts with label Area News. Show all posts
Showing posts with label Area News. Show all posts

கொளத்தூர் ஸ்ரீவேல்முருகன் ஆலயத்தில் மஹா கந்தசஷ்டி, சூரசம்ஹாரம், திருக்கல்யாண வைபவம்

 


கொளத்தூர், விவேக் நகரில் உள்ள ஸ்ரீவேல்முருகன் ஆலயத்தில் மஹா கந்தசஷ்டி, சூரசம்ஹாரம் திருக்கல்யாண வைபவம் நடைபெற இருக்கிறது.  வரும் சனிக்கிழமை 02.11.2024 அன்று மஹா கந்தசஷ்டி ஆரம்பம், கந்த சஷ்டியை முன்னிட்டு 6 நாட்கள் தினமும் காலை 7.30 மணிக்கு மஹா அபிஷேகம் நடைபெறும்.

நிகழ்ச்சி நிரல்

02.11.2024
காலை 7 மணிக்கு பந்தகால் 
மாலை 5 மணிக்கு கொளத்தூர் சஹஸ்ர நாம மண்டலி குழுவினரின் திருப்புகழ் நிகழ்ச்சி

03.11.2024
வேல்மாறல்

04.11.2024
கந்தகுரு கவசம்

05.11.2024
இசைவல்லுனர் டி.ஏ.எஸ். தக்கேசி அவர்களின் மாணவ மாணவிகளின் குழுவினர்களால் சங்கீத பக்தி பாடல் இசைநிகழ்ச்சி நடைபெறும்

06.11.2024
முருகன் பக்தி பாடல்கள்

07.11.2024
காலை 8 மணி முதல் 11 மணி வரை லட்ச்சார்ச்சனை
மாலை 5 மணிக்கு சூரசம்ஹாரம்

08.11.2024
மாலை 5 மணி திருக்கல்யாண வைபவம்

தொடர்புக்கு
ஆலய நிர்வாகம்
9840307681

கொளத்தூரில் போதைப்பொருள் தடுப்பு உறுதிமொழி

 










 கொளத்தூர் பூம்புகார் நகரில் இயங்கி வரும் ஆண்டன் பவுன்டேசன் நிறுவனம் பெருநகர சென்னை காவல்துறையுடன் இணைந்து போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு உறுதி ஏற்பு இணைய வழி கையெழுத்துப் பிரச்சார நிகழ்வினை கொளத்தூர் மூகாம்பிகை சந்திப்பில் நடத்தினர். இதில் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு கையெழுத்திட்டனர். இந்நிகழ்வை வெற்றிகரமாக நடத்த உதவிய காவல்துறையினருக்கும் பொதுமக்களுக்கும் ஆண்டன் பவுன்டேசன் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

செய்திக்குறிப்பு படங்கள் 
ஆண்டன் பவுன்டேசன், கொளத்தூர்


Anti Drug Signature Campaign at Kolathur by Anton Foundation & Greater Chennai City Police




செந்தில் நகர் வியாபாரிகள் சங்கம் கோரிக்கை








கொளத்தூர் செந்தில் நகர் 3வது மெயின் ரோட்டில் உள்ள தெருவிளக்குகள் சரியாக இயங்காததாலும், மழைநீர் வடிகால் கால்வாய் பணிகள் சரிவர முடிக்கப்படாமல் உள்ளதாலும் மினி பேருந்துகள், வியாபாரிகள் மற்றும்  பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றார்கள். ஆகவே அப் பணிகளை விரைந்து செயல்பட்டு முடித்துத் தருமாறு பெருநகர சென்னை மாநகராட்சி கண்டித்து இன்று காலை செந்தில் நகர் சிக்னல் அருகில் செந்தில் நகர் மற்றும் 200 அடி அனைத்து வியாபாரிகள் சங்கத்தின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் வில்லிவாக்கம் அசிஸ்டன்ட் கமிஷனர் மற்றும் ராஜமங்கலம் ஆய்வாளர்,  வியாபாரிகளையும் பெருநகர சென்னை மாநகராட்சி அதிகாரிகளையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். விரைந்து கோரிக்கைகளை நிறைவேற்றி கொடுப்பதாக வாக்குறுதி அளிக்கப்பட்டதால்  நடைபெற இருந்த ஆர்ப்பாட்டத்தை விலக்கிக் கொள்வதாக செந்தில் நகர் மற்றும் 200 அடி அனைத்து வியாபாரிகள் சங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

படங்கள் : செந்தில் நகர் மற்றும் 200 அடி அனைத்து வியாபாரிகள் சங்கம்

கொளத்தூர் கதைகள் - மனிதம் மதிப்போம் அர்ச்சனா






கொளத்தூர் மெயில் வாசகர்களுக்கு வணக்கம். என் பெயர் அர்ச்சனா. வில்லிவாக்கத்தில் பிறந்து வளர்ந்தேன். சிறு வயதில் முதல் நான் கஷ்டப்பட்டு வளர்ந்த காரணத்தால், இன்று பிறருக்கு உதவும் நோக்கில் மனிதம் மதிப்போம் எனும் அறக்கட்டளை ஒன்றை ஆரம்பித்து அதன் மூலமாக சாலையோரம் காணப்படும் ஏழை எளிய மக்கள், ஆதரவற்றோர்களுக்கு, முதியவர்களுக்கு, மாற்றுத்திறனாளிகளுக்கு தினம்தோறும் சுமார் 150 பேருக்கு மதிய உணவு அளித்து வருகிறோம். உணவுகளை நான் மற்றும் எனது தோழிகள் கனிமொழி, பவித்ரா மூன்று பேர் மட்டும் நேரடியாக வினியோகம் செய்கிறோம்.



சாம்பார் சாதம், தக்காளி சாதம், புளிசாதம் போன்ற கலந்த சாதங்களும் சில வேளை குழம்புடன் கூடிய சாதங்களும் வழங்குகிறோம். நமது வீட்டில் எப்படி செய்து தருவோமோ அதே போல சுகாதாரமான முறையிலும், அன்றன்று காய்கறிகள் வாங்கி செய்தும் உணவுகளை சமைக்கிறோம். வில்லிவாக்கம் இ.சி.ஐ சர்ச் அருகில் நமது இடத்தில் சமையல் பணிகளை மேற்கொள்கிறோம். 

இதனையடுத்து ஆதரவற்ற குழந்தைகளுக்காக திருநின்றவூரில் நத்தம்மேடு என்கிற பகுதியில் எனது சொந்த இடத்தில், குழந்தைகளுக்காக  அறத்தின் அகம் என்றொரு இல்லம் எழுப்பி அதில் அவர்களுக்கு தேவையான வற்றை செய்து தந்து அவர்களைப் பார்த்துக் கொள்ளலாம் என பணிகளை மேற்கொண்டு வருகிறேன். 


இதற்கு என்னுடைய பொன், பொருள் அனைத்தையும் செலவு செய்தது மட்டும் அல்லாமல் பலருடைய பங்களிப்பினாலும் இதனை செய்து வருகிறேன்.  நீங்களும் இதற்கு உதவ விரும்பினால் செய்யலாம். உங்களது ஒவ்வொரு ரூபாயும் சரியான முறையில் இத்திட்டத்திற்கு பயன்படுத்தப்படும். 

எப்பொழுதுமே நாங்கள் வெளிப்படையாக இயங்கி வருகிறோம். எங்களுக்கு கிடைக்கும் உதவியின் தகவல்கள், செய்யும் பணிகளை வீடியோக்கள் வடிவில் சமூக ஊடக தளங்களில் உடனுக்குடன் பதிவிட்டு வருகிறோம். இதனைப் பார்த்து வில்லிவாக்கம் மட்டும் அல்லாது உலகெங்கிலும் உள்ள தமிழர்களின் உதவியும் தொடர்ந்து எங்கள் அறக்கட்டளைக்கு கிடைத்து வருகிறது. 


முதலில் வாரத்தில் ஒரு நாள் மட்டும் உணவு தரலாம் என 2017ல் ஆரம்பித்தோம். பிறகு  2018ல் இருந்து தொடர்ந்து அனைத்து நாட்களும் தந்து கொண்டிருக்கிறோம். 150 முதல் 1000 நபர்கள் வரை நாங்கள் உணவு தருகிறோம். பண்டிகைக்காலங்களில் பிறர் உதவிகளின் மூலம் துணிகள், போர்வைகள் போன்றவற்றையும் வழங்கி வருகிறோம்.

நான் பத்தாவது படிக்கும்பொழுது தந்தை கேன்சர் நோய் பாதிப்பால் இறந்து விட்டார். பிறகு அம்மா பட்ட கஷ்டங்கள் ஏராளம். நான்  அப்பொழுது சரிவர உணவு இல்லாமல், உறைவிடம், உடை இல்லாமல் பட்ட சிரமங்களை மனதில் கொண்டு இப்பணிகளை மேற்கொண்டு வருகிறேன். இப்பொழுது எனது பிசினஸில் கிடைக்கும் பணம் உட்பட பிறர் உதவிகளையும் சேர்த்து என்னால் இயன்றவற்றை செய்து வருகிறேன். 

எனது இந்தப் பணியில் எனக்கு துணையாக இருப்பது பவித்ரா, கனிமொழி எனும் தோழிகள் ஆவர். நான் படிக்கும் காலத்தில் இருந்தே எனக்கு மாபெரும் துணையாகவும் உதவிகளும் செய்த வந்த இவர்கள் இன்று இந்த அறக்கட்டளையிலும் தூணாக துணையாக விளங்குகிறார்கள்.

நல்ல நண்பர்கள், உறவினர்கள் மூலமாக கடவுள் நம்மை கைவிடமாட்டார் என்பதற்கு இதுவே சான்று. நமது எண்ணங்களும் செயல்களும் சரியானதாக இருந்தால் நாம் வாழ்வில் வெற்றி பெறுவோம் என தெரிவித்துக் கொள்கிறோம்.














தொடர்புக்கு :








கொளத்தூர் முருகன் கோயில் தெரு - சீரமைக்க மக்கள் கோரிக்கை

 




கொளத்தூர் விவேகானந்தா மெயின் ரோடு, முருகன் கோயில் தெருவில் சில மாதங்களுக்கு முன்னதாக மழை நீர் கால்வாய் அமைக்கும் பணிகள் நடைபெற்றது. அப்பணிகளுக்கு பிறகு சாலை சமன் செய்யப்படாததாலும், சமீபத்திய பெரு மழையினாலும் சேதாரமுற்ற நிலையில் இருக்கிறது. மழைக்காலங்களில் வாகன ஒட்டிகள் இவ்வழியே செல்ல மிகுந்த சிரமம் ஏற்படுவதாகவும் விபத்துக்கள் ஏற்படும் முன்னர் தகுந்த நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




List of Candidates - Kolathur & Surrounding Constituencies




Complete List of Candidates

Villivakkam

Perambur

Ambattur


TN Elections, MK Stalin, Adhi Rajaram, DMK, ADMK, Kolathur, Villivakkam Constituency, 

கொளத்தூர் ஸ்ரீமுத்துமாரியம்மன் திருக்கோயில் பூச்சொரிதல் விழா




வளர்பிறை பஞ்சமியை முன்னிட்டு கடந்த மார்ச் மாதம் 18ம் தேதியன்று கொளத்தூர் எம்.ஜி.ஆர் நகரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோயிலில் அஷ்டவராஹி அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டனர்.



மேலும் வரும் மார்ச் மாதம் 28ம் தேதியன்று பங்குனி உத்திரம் பூச்சொரிதல் திருவிழா மாலை 5 மணி முதல் 6.30 மணி வரை நடைபெற உள்ளது. இதில் பௌர்ணமியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடைபெறும். கட்டணம் ரூ.101

வரும் ஏப்ரல் 1ம் தேதி வியாழன் அன்று மாலை 6.30 முதல் 8 மணி வரை தேய்பிறை பஞ்சமி திதியில் அஷ்டவராஹி ஹோமம் நடைபெறுகிறது. கட்டணம் ரூ.80 

மேலும் தகவல்களுக்கு தொடர்பு கொள்க திரு.மோகன் 98840 03232.


Tags : Kolathur Temple News, MGR Nagar, Varahi Amman Koil

Covid 19 Vaccination Centres - In and Around Kolathur

LIST OF URBAN PRIMARY HEALTH CENTRES

  • Lakshmipuram UPHC Gangaiamman Koil st, Lakshmipuram, Ch-99
  • Anjugam nagar 3rd street kolathur, Ch-99
  • Kolathur UPHC, Srivinasa Nagar 3rd Main Road, Kolathur, Ch- 99,HP
  • TVK Nagar UPHC, Pallavan salai, Ch
  • Agaram (S) UPHC, No.9, Somaiya St, Agaram, Ch-82,HP
  • Sembuim UPHC, No.238,Papermills Road,Sembium,Ch- 11
  • N.N.Nagar UPHC, No.43, Vasantha Garden Main Road, Ayanavaram, Chennai - 23
  • Siruvallur UPHC, No.12, Kabilar St,Perambur, Ch-11,HP
  • Agathiar nagar UPHC, No.1, 1st main road, agathiar Nagar , Villivakkam,Venugopal st,Ch-49.
  • Villiwakkam UPHC, Mannady st, Villiwakkam, (Near.Bus Depo),east mada street,Ch-49.D
  • N.A.(S) UPHC, 1,Officers colony (near post office) Ayanavaram, Ch-23,HP.
  • Ayanavaram UPHC, Chennai Primary School,Solai Street,Ayanavaram, Ch.


COVID VACCINATION CENTRES


  • No.47, Swamy Nagar,Madhavaram, Ch
  • No.5, Church road,TMP Nagar, Brittania company back side, Padi, CH 50
  • 29,United India Nagar, Ayanavaram,Ch-23.


List of Pvt Hospitals

  • Sri Kumaran Hospital, Retteri,Chennai TN.
  • Sen Hospital Perambur,Chennai TN.
  • R.P.S Hospital,Ambattur,Chennai TN.
  • KGJ Hospital Korattur 13.


LIST OF GOVT HOSPITALS, CENTRAL GOVT & ESI HOSPITAL

  • Govt.TB Hospital Otteri, Chennai, TN. 
    Ayanavaram Rd, Otteri, Ayanavaram, Chennai, Tamil Nadu 600023
  • Govt. Peripheral Hospital, Anna Nagar, Chennai, TN. 
    3rd Ave, Annai Sathya Nagar, Anna Nagar, Chennai, Tamil Nadu 600102
  • ESI Hospital Ayanavaram
  • Perambur Railway Hospital

For Complete list of locations in Chennai : https://chennaicorporation.gov.in/gcc/covid-vaccine/

Kolathur, Villivakkam Election Update - Candidates filed so far

 

Click Here to view candidates applied so far for contesting in Kolathur constituency in upcoming assembly elections.

Click Here to view candidates applied so far for contesting in Villivakkam constituency in upcoming assembly elections.

Watch this for regular election updates!


TN Assembly Elections, Kolathur, Villivakkam Constituencies, Candidates, M.K.Stalin, DMK, ADMK, Nam Tamilar Katchi, MNM, Makkal Neethi Maiam, JCD Prabakar, Adi Rajaram, Election Day, Final List, 6th April

ஆலயம் அறிவோம் - அருள்மிகு தேவிபாலியம்மன் திருக்கோயில் - வில்லிவாக்கம்

 

நமது பகுதியில் உள்ள அனைத்து சமய வழிபாட்டுத் தலங்கள் குறித்து அறிவோம் வாருங்கள்! 

அருள்மிகு தேவிபாலியம்மன் திருக்கோயில் - வில்லிவாக்கம்




அருள்மிகு ஸ்ரீதேவி பாலியம்மன் ஆலயம் கொன்னூர் என்று அழைக்கப்படும் வில்லிவாக்கம் பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ளது. இந்த ஆலயம் சுமார் 600 ஆண்டுகள் பழமையானது என கூறப்படுகிறது.

இதன் அருகாமையில் ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் ஆலயமும், சௌமிய தாமோதர பெருமாள் ஆலயமும் உள்ளது. இதுவும் மிகவும் பழமையானது.

இந்த ஆலயத்தை சுற்றி வடக்கே அருள்மிகு இளங்காளியம்மனும், மேற்கே அருள்மிகு மொப்பிலி அம்மனும், கிழக்கே திருவீதி அம்மனும், தெற்கே தான்தோன்றி அம்மனும், கொளத்தூர் சீனிவாசா நகரில் அருள்மிகு கன்னியம்மன் ஆலயமும் அமைந்துள்ளது.

கோவில் அமைப்பு

ஸ்ரீ பாலியம்மன் ஆலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. சுற்றுச்சுவர் வெளிவாசல் முகப்பு மண்டபம் மேலே இருபக்கமும் மலர் ஏந்தி இரு இளம் பெண்கள் இடையில் ஐந்து தலை நாக குடையாக அம்மன் நான்கு கரத்தினை கொண்டு காட்சி தருகிறாள்.

ஸ்தல வரலாறு

வில்லிவராண்யம் என்னும் வில்லிவாக்கம் ஸ்ரீ பாலியம்மன் திருக்கோயில் மாபெரும் அக்னிஷேத்திரம் ஆகும். இதில் மூர்த்தி, தீர்த்தம், விருட்சம் ஆகியவை இப்பகுதியில் மிகவும் புகழ் பெற்றவை.

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு நமது புகழ்பெற்ற வில்லிவாக்கம் ஏரிக்கரையில் அழகுருவான பெண் ஒருவர் வேம்பு மரத்தடியில் நின்று அவ்வழியே சென்றவர்களிடம், என் உடல் எரிச்சலைடைகிறது, இந்த ஏரியிலிருந்து நீர் எடுத்து எனக்கு அபிஷேகம் செய்யுங்கள் என்றார்.

இதனைக் கேட்டு அங்கு கூடியிருந்த பெண்கள், ஏரி நீரைக் கொண்டு வந்து அபிஷேகம் செய்தனர். அதன் பின்னர் தெய்வீக களையுடன் காட்சியளித்த அந்த பெண் சாந்தியடைந்தார். எனது முற்பிறவு ரேணுகா பரமேஸ்வரி என்பதாகும். இப்பொழுது பாலி என்றழையுங்கள், நான் இளைப்பாற கோயில் ஒன்று கட்டித் தாருங்கள் என்று கூறி மறைந்தாள் என்பது ஐதீகம்.

இதன்பின்னர் சிலகாலம் சென்றபிறகு மக்களால் சிறிய கோயில் ஒன்று கட்டப்பட்டு அன்னை ஸ்ரீ பாலி பூஜிக்கப்பட்டு வந்தார். இந்த ஊர் பேரூராக மாறிய காலத்தில் மிக பிரமாதமான அளவில் பெரியதோர் ஆலயத்தை நிர்மாணித்து சகல வசதிகளுடன் ஆகம வதிகளுடன் அன்னை ஸ்ரீ பாலி பூஜிக்கப்பட்டு வருகிறார்.



கட்டுரையாளர் திரு.தாரகராமன், சீனிவாசா நகர்



Devibaliamman Kovil, Villivakkam, Baliamman Temple villivakkam Kolathur

செந்தில் நகரில் பொங்கல் விழா

 



கொளத்தூர் செந்தில் நகர் 15வது தெருவில் குடியிருப்போர் சார்பில் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. அப்பகுதி மக்கள் ஒருங்கிணைந்து பொங்கல் வைத்தும் சிறார்களுக்கு பல்வேறு பொங்கல் சார்ந்த நிகழ்வுகளையும், விளையாட்டுப் போட்டிகளையும் ஒருங்கிணைத்தனர்.

படங்கள்:  நமது வாசகி, திருமதி.கல்யாணி, செந்தில் நகர் 15வது தெரு.











Kolathur Pongal Celebrations
Pongal Celebrations at Senthil Nagar 15th Street, Kolathur



Miss Super Globe Akshara Reddy Inaugurates ‘Avalagam’ - Fashion Studio for Women





Miss Akshara Reddy, a Chennai based actress and model, who have won the title ‘Miss Super Globe 2019’  by representing India among 22 other countries in an international beauty pageant held in Dubai  last year, recently visited Kolathur and inaugurated the fashion studio, ‘Avalagam’, located in Vivekananda Nagar, Kolathur, Near Reliance Fresh.

Mrs.Saranya Srinivasan, fashion designer and proprietor of Avalagam-the fashion shop spoke to us about her new venture:

“Avalagam is for women who love to dress up uniquely and stand out from the crowd. Avalagam was started as a cottage industry at home to a shop. This is my dream for which I had a  career break from corporate  job. 

Avalagam is one of the few registered brands in Kolathur! We sketch designs for you, provide doorstep designer suggestions and services for bridal and orders above Rs.5000. 



We are specialised in customising mom and daughter combos and 1st birthday frocks for baby angels. Aari embroidery and bridal frocks can also be customised.

We offer services at affordable rates. Designer fit on your blouses @ just Rs.250 and lining churidar set @ just Rs.600. Special discounts on bridal frock and bridal blouses available. 

For every special woman in you step out and enlighten the world.”  

For appointments and enquiry contact:

Aval Agam, Plot No.11, Aadhi Alagar Nivas, Vivekananda Main Road, Kolathur. (Next to Reliance Fresh). 

Ph. : 9566149933. 

Timing: 10.30 am to 8 pm. We  work on  Sunday’s on prior appointments.

Kolathur Mail - Mpaper - November 19



Kolathur Mail • November 2019 Issue • Mpaper Version


  • Click the arrow icon in right top corner to view full screen
  • Optimised for mobile viewing - Electronic version of printed copy
  • Contact for advertisement 99624 55494



Kolathur Mail - Vpaper 2



Kolathur Mail - Vpaper - Local News in Video Format


  • 52nd National Library Week - Villivakkam Library Book Exhibition
  • Teacher's Colony Saturday 6 pm - Thiru.Vi.Ka Peacharangam
  • Mohammed Ali Silamba Koodam
  • Sakthi Nagar Extension - Civic News - Letter to Editor
  • Kolathur Mail Annual Awards - Young Stars Announcement
  • Personality of the Week - A.V.Surendran, Chennai North West Dt President, Exnora
கொளத்தூர் மெயில் வீடியோ பேப்பர் உள்ளூர் செய்திகள்

  • 52வது தேசிய நூலக வார விழா, வில்லிவாக்கம் புத்தக கண்காட்சி
  • டீச்சர்ஸ் காலனி, திரு.வி.க பேச்சுப் பயிலரங்கம்
  • முகமது அலி சிலம்பக் கூடம்
  • சக்தி நகர் எக்ஸ்டென்ஷன் வாசகர் கடிதம்
  • கொளத்தூர் மெயில் யங் ஸ்டார்ஸ் போட்டிகள்
  • சிறப்பு நபர். ஏ.வி.சுரேந்திரன், எக்ஸ்னோரா இன்டர்நேஷனல்

விவேகானந்தா நகரில் மரம் நடுதல்




யாவே அன்பின் ஊழியங்கள் மற்றும் அறக்கட்டளை சார்பில் கிருஷ்ணப்பிரியா பவுண்டேஷனுடன் இணைந்து கொளத்தூர் விவேகானந்தா நகரில் பல்வேறு இடங்களில் சுமார் 22 மரக்கன்றுகள் நடப்பட்டது. இந்நிகழ்விற்கு யாவே அன்பின் ஊழியங்கள் நிறுவனர் திரு.ஈஸ்டர் ராஜ் தலைமை தாங்கினார்.




 




Yahweh Ministries Tree Planting
Krishnapriya foundation
Vivekananda Nagar Kolathur