Showing posts with label Articles. Show all posts
Showing posts with label Articles. Show all posts

ஆலயம் அறிவோம் - கன்னியம்மன் ஆலயம், சீனிவாசா நகர்




நமது கொளத்தூர் சீனிவாசா நகரில் அருள் பாலிக்கும் ஸ்ரீகன்னியம்மன் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன் மகிழம் மரம் அடியில் அருவரமாக காட்சியளித்தவர். அப்பொழுதே அருகில் உள்ள மக்காரம் தோட்டத்தில் உள்ளவர்களுக்கு குலதெய்வமாக இருந்திருக்கிறார்.

அப்பொழுது பனை மரங்கள் சூழ கிராமணிகள்  வம்சத்தினர் வசம் இருந்தது இந்த இடம். திரு.முனுசாமி, திரு.தேவராஜிலு ஆகியோர்  கொளத்தூர் ஹவுசிங் சொசைட்டி என்று ஆரம்பித்து இந்த இடம் வாங்கப்பட்டு சீர்திருத்தி மனைப்பிரிவு ஒதுக்கப்பட்டது. 1964ம் வருடம் ஏப்ரல் மாதம் சீனிவாசா நகர் உருவாகியது. கோயிலுக்கு என்று ஒதுக்கிய இடத்தில் மகிழம் மர அடியில் சுயம்புவாக காட்சியளித்தார் கன்னியம்மன்.

1966ம் வருடத்தில் அப்பொழுது குடியேறிய திரு.சூரியபிரகாசம் நன்முயற்சியால் ஸ்ரீசப்த கன்னிமார்களுக்கு தென¢னை ஓலைகளால் உரை வேய்ந்து விளக்கேற்றி வழிபட்டார். அவருக¢கு உறுதுணையாக துணைவியார் திருமதி.காந்தம்மாள் மேலும் திருமதி.வசந்தம்மாள¢, திருமதி.புஷ்பம்மாள், திருமதி.சுசீலாபாபு என பலர் விளக்கேற்றி வழிபட்டு வந்தனர்.

ஸ்தல வரலாறு

இக்கோயில் மிகவும் பழமை வாய்ந்தது. சுமார் 200 ஆண்டுகளுக்கு மேலாக ஸ்ரீஸத்ய கன்னிமார்கள் மகிழமரத்தடியில் சுயம்புவாக தோன்றியுள்ளனர்.
அருள்மிகு ஸ்ரீ கன்னியம்மன் நடுவே புரதானமாக வீற்றிருப்பது ஸ்ரீ கமலக்கன்னி தேவியாரும் வலதுபுறத்தில் முறையே ஜலக்கன்னி, தாமரைக்கன்னி, இடும்பாசுர கன்னியும், இடது புறத்தில் முறையே பாலகன்னி, புஷ்பகன்னி, நாக கன்னியும் சுயம்புவாக தோன்றியுள்ளனர். இக்கோவில்  தலவிருட்சம் மகிழமரமாகும்.

மிகவும் பழமை வாய்ந்ததாக இருப்பதால் எவ்வித மாற்றமும் செய்யாமல் அப்படியே சுயம்புவாக வைத்துள்ளனர். இப்பொழுது சப்த கன்னிகளுக்கு வௌ¢ளிக் கவசம் மட்டும் சாத்தப்படுகிறது. சப்தகன்னிகளின் ருத்ரத்தை குறைக்கும் பொருட்டு ஸ்ரீராஜ ராஜேஸ்வரி அம்மனின் படம் பின்புறம் வைத்து சாந்தப்படுத்தியுள்ளனர்.

ஆலயத்தில் இடதுபுறம் ஸ்ரீ வெங்கடாசலபதியும் வலதுபுறத்தில் முருக பெருமானும் பிரதிஷ்டை செய்யப்பட்டு¢ள்ளது.
ஸ்ரீ சப்த கன்னியம்மன் சந்நிதி கிழக்கு முகமாக அமைந்துள்ளது. முதலில் சிமென்ட் கூரை போடப்பட்டுள்ளது. பிறகு ஆர்.சி.சி. கூரை போடப்பட்டது. சமயபுரம் இராமனாசுவாமி தலைமையில் முதல் கும்பாபிஷேகம் கடந்த 12.4.1987இல் நடைபெற்றது.

அதன்பிறகு இரண்டாவதாக 24.1.93 அன்று நடந்த கும்பாபிஷேகத்தில் ஸ்ரீ வலம்புரி விநாயகர், ஸ்ரீ முனிஸ்வரர், ஸ்ரீ நாகவல்லி அம்மன் வாகனங்கள் உரிய நவக்கிரகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு திருவையாறு குருமூர்த்தி சாஸ்திரிகளால் மாண்புமிகு நீதிபதி திரு.பி.பாஸ்கரன் அவர்கள் முன்னிலையில் வெகு விமரிசையாக  விழா நடைபெற்றது.
26.9.94 அன்று அருள்மிகு ஸ்ரீராஜ ராஜேஸ்வரி ஐம்பொன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு விழா நடைபெற்றது.

அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் சமேத அருள்மிகு மீனாட்சி அம்மன், ஸ்ரீ தட்சிணாமூர்த்தி ஸ்ரீ துர்க்கை அம்மன் திரு உருவ சிலைகள் பிரதிஷ்டை 29.4.1998 அன்று மாண்புமிகு நீதிபதி பி.பாஸ்கரன் முன்னிலையில் நடைபெற்றது.

திருவிழா விபரங்கள்

ஒவ்வொரு வருடமும் சித்ரா பௌர்ணமி அன்று மட்டும் மாலை 6 மணி அளவில் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்மன் நன்கு அலங்கரிக்கப்பட்டு நான்கு வீதிகளிலும் பவனி வருதல் கண் கொள்ளாக் காட்சியாகும்.
2015 சித்ரா பௌர்ணமி முதல் ஒவ்வொரு பௌர்ணமியிலும் ஸ்ரீ ஸத்திய நாராயணர் பூஜை மாலையில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
அருள்மிகு ஸ்ரீ மீனாட்சிக்கும் ஸ்ரீ சுந்தரேஸ்வரருக்கும் மதுரையில் நடைபெறும் அதே நாளன்று திருமண மஹோற்சவம் நடைபெற்று வருகிறது. பங்குனி உத்தரம் அன்று பூச்சொரிதல் அதை அடுத்து சித்திரையில் பால்குடம் எடுத்தல் நடைபெற்று வருகிறது. ஜனவரி மாதத்தில் புதுவருட பூஜை நடைபெறுகிறது.

சங்கடஹர சதுர்த்தி, பிரதோஷம், தேய்பிறை, அஷ்டமி, மூலம், திருவோணம், ஏகாதசி, முனிஸ்வரருக்கு சித்திரை மாதத்தில் முதல் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு பூஜை நடைபெறுகிறது-.

நவராத்திரி ஒன்பது நாட்களும் அம்மனுக்கு விதவிதமான அலங்காரங்கள் செய்யப்பட்டு சிறப்பாக நடைபெறுகிறது.
பிரதி வௌ¢ளிக்கிழமைகளில் காலை 9 மணியில் இருந்து மதியம் 12 மணி வரை மாதர்களால் அபிஷேகம் செய்து ஆராதனை நடைபெற்று வருகிறது.
ஆடி மாதத்தில் 4வது வாரம் ஞாயிற்றுக்கிழமை கூழ்வார்த்தல் நடைபெறுகிறது.

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு விசேஷ அலங்காரமும் நான்காவது வார சனிக்கிழமைகளில் பஜனையும் நடைபெறுகிறது.
2004ம் வருடம் செப்டம்பர் திங்கள் எல்லா மூர்த்திகளுக¢கும் மகா கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது. அதுவரை நிர்வாக குழுவினரின் கீழ் கோயில் நடைபெற்று வந்தது.

2008ம் வருடம் முதல் ஸ்ரீ கன்னியம்மன் ஆலயம் அறக்கட்டளை என்ற பெயரில் திரு.வெங்கடபதி  செயலாளர், திரு.ஆர்.சீனிவாசன் தலைவர் ஆகியோரின் கீழ் செயல்பட்டு வந்தது. திரு.வெங்கடபதி இறைவன் அடி சேர்ந்த பிறகு திரு.சந்தான கிருஷ்ணன் செயலாளராக செயல்பட்டு வருகிறார்.
இன்று நமது காவல் தெய்வமாக அருள் பாலிக்கும் நமது ஸ்ரீ கன்னியம்மன் கொளத்தூர் வாழ் மக்களுக்கும் ஏனைய மக்களுக்கும் அருள் பொழிந்து வருகிறார்.

செங்கல்பட்டு அருகில் மணப்பாக்கம் ஸ்ரீ கன்னியம்மன், அடுத்த இரண்டாவது படைவீடாக கொளத்தூர் ஸ்ரீ கன்னியம்மனை வழிபடுவோம். எல்லா வளமும் பெற்று இன்புற்று வாழ ஸ்ரீ கன்னியம்மன் அருளை வேண்டுகிறோம். நன்றி.


ஜுலை 2016 இதழில் வெளிவந்த கட்டுரை


கட்டுரையாளர் திரு.தாரகராமன், சீனிவாசா நகர்

ஆலயம் அறிவோம் - பவானியம்மன் ஆலயம், டீச்சர்ஸ் காலனி




அருள்மிகு பவானி அம்மன், அருள்மிகு காமாட்சி அம்பிகா உடனுறை அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில் நமது கொளத்தூர் டீச்சர்ஸ் காலனி, நான்காம் மனைப்பிரிவு பகுதியில் பஸ்நிலையம் அருகில் அமைந்துள்ள திருத்தலம் ஆகும.
பழைய மற்றும் புதிய லட்சுமிபுரம் மக்கள், விவேகானந்தா நகர், ஹுசைன் காலனி மற்றும் அவற்றை சுற்றியுள்ள புதியதாக உருவாகியிருக்கும் நகர் மக்கள் பலருக்கும் இஷ்ட தெய்வமாக அருள்பாலித்து வருகிறது இத்திருக்கோயில்.

கடந்த 1985ம் ஆண்டு ஜனவரி 20ம் தேதி சிறிய சன்னதியாக உருப்பெற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் உதவிக்கரம் நீட்டி இக்கோயிலின் நிர்வாகக் குழுவால் பல கட்டங்களில் திருப்பணிகள் நடைபெற்றன. 2006ம் ஆண்டு பொறுப்பேற்ற நிர்வாகக் குழுவால் இத்திருக்கோயில் ஆகமவிதிப்படி பல மாற்றங்களும், பல்வேறு சன்னதிகளும், மண்டபங்களும், பிரவார தெய்வங்களின் சன்னதிகளும், அருள்மிகு பவானி அம்மன் நுழைவு வாயிற்படிக்கு முன் துவார பாலக சக்திகளும் நுழைவு வாயிலின் மேற்புரம் கஜலட்சுமி திருவுருவமும் அமைக்கப்பெற்று, இக்கோயில் தற்சமயம் ஒரு கம்பீரத் தோற்றத்தை தருகிறது.
இத்திருப்பணிகள் அனைத்துமே அன்னை பவானி அம்மனின் அருளாசியால், இப்பிறவியின் பாக்கியமாகக் கொண்டு பல விதங்களில் உதவிய மெய்யடியர்களுக்கும், நிர்வாகக் குழுவுக்குமே தற்சமய கம்பீரத் தோற்றத்திற்கு காரணமானவர்கள் என்றால் அது மிகையாகாது.
ஸ்தலபுராணம்

கடந்த 20.01.1985 அமாவாசை ஞாயிறன்று வெளிப்புறத்தில் துப்புரவு செய்து கொண்டிருந்த சமயம் ஒரு நல்ல பாம்பு தோன்றி  நெளிந்து நெளிந்து தற்போதுள்ள கோயில் இடத்தில் உள்ள கற்குவியலுக்குள் ஓடி ஒளிந்து விட்டது. நல்ல பாம்பை அடிப்பதற்காக முயற்சி செய்த போது, அவர்களுடன் வேலை செய்து கொண்டிருந்த ஒரு பெண் அம்மன் அருள் வந்து ஆட ஆரம்பித்து, “நான் பவானி வந்திருக்கிறேன் என்னை அடிக்காதீர்கள் எனக்கு ஒரு இடம் அமைத்துக் கொடுங்கள், நான் இங்குள்ள அனைவரையும் பாதுகாத்து நன்றாக வாழ அருள்புரிகிறேன்” என்று அப்பெண்ணின் மூலமாக அருள்தந்து மறைந்து விட்டாள்.

இத்திருக்கோயிலில் அருள்மிகு பவானி அம்மனை பிரதிஷ்டை செய்வதற்கு முன் காஞ்சி மகாப் பெரியர்களிடமும் அருளாசி பெற்று, அவர் அனுப்பிவைத்த மடத்திலிருந்து வந்தவரின் ஆலோசனையுடன் அனேக பக்தர்களின் உதவியுடன் வேலைகளை நிறைவேற்றி, ஸ்வஸ்திஸ்ரீ பிரோஜ்பத்தி வருடம் சித்திரை மாதம் 22ம் நாள் ஞாயிற்றுக்கிழமை உத்திராடம் நட்சத்திரத்தில் (05.05.1991) காலை 10.30 மணிக்குமேல் 11.15 மணிக்குள் தெய்வங்கள் பிரதிஷ்டையும், அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகமும் அனைத்து பக்த கோடிகள் பிரார்த்தனையும் சிறப்பாக நடைபெற்றது.

ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதம் உத்திராட நட்சத்திரதினத்தன்று அம்மன் வீதி உலா வந்து அனைவரையும் அருள் பாலித்து வருகிறாள். இது பத்து நாட்கள் உற்சவமாகக் கொண்டாடப்படுகிறது. அதே போன்று, தீபாவளிக்கு மறுநாள் பிரதமையிலிருந்து சஷ்டிவரை ஆறு நாட்களும் கந்த சஷ்டி விழாவும், 7ம் நாள் ஸ்ரீவள்ளி தேவயானை ஸமேத சுப்ரமணியருக்கு திருக்கல்யாண உற்சவமும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

11.07.1993 அன்று ஸ்ரீ ஆஞ்சநேயர், நவக்கிரகங்களுக்கு தனிச் சன்னதிகள் அமைந்து முறைப்படி கும்பாபிஷேகம் நடைபெற்றது. முதல் இரண்டு ஆண்டுகள் அம்மனை சூலத்தில் எழுந்தருளச் செய்து வீதி உலா நடைபெற்றது. மூன்றாம் ஆண்டு உற்சவமூர்த்திகள் செய்யப்பட்டு ஸ்வஸ்திஸ்ரீ பவ வருஷம் சித்திரை மாதம் 11ம் தேதி ஞாயிற்றுக்கிழமை 24.04.1994 அன்று முறைப்படி யாகசாலை அமைத்து கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதன் பின்னர் உற்சவ மூர்த்தி அலங்கரிக்கப்பட்டு திருவீதி உலா நடைபெற்று வருகிறது.
மங்களகரமான விரோத ஆண்டு ஆவணி 14ம் நாள் 30.08.2009 ஞாயிற்றுக்கிழமை வர்ண கலாபங்கள் சிற்ப சாஸ்திர சிவாகம முறைப்படி செய்யப்பட்டு ஜுரோணத்தாரண அஷ்டபந்தன மகாகும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. அருள்மிகு ஸ்ரீபவானி அம்மனின் அருளால் காடாகக் கிடந்து சுற்றுப்புற இடங்கள் அனைத்தும் நகர்புறங்களாக மாறிவிட்டன என்றால் மிகையாகாது.

உள்ளும் புறமும் நமக்குத் துணையாக நிற்கும் ஆண்டவனின் பெருமை வாய்ந்த அதிலும் நமக்கு மிக அருகிலேயே அமைந்துள்ள அருள்மிகு பவானி அம்மன், அருள்மிகு காமாட்சி அம்மன் உடனுறை ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரத் திருக்கோயிலைப் பற்றி, நான் எழுதியுள்ள இப்பகுதியை படிப்பவர்கள் அனைவரும் நல்லவனெல்லாம் பெறுவர் என்பது என் உறுதியான அசைக்க முடியாத நம்பிக்கை.


ஜுன் 2016 இதழில் வெளிவந்த கட்டுரை



கட்டுரையாளர்  ஜோதிட சக்ரவர்த்தி நடேச நாராயணன்