பெரியார் நகர் கென்னடி தெருவில் உள்ள ரேடியேன்ஸ் பள்ளி வளாகத்தில், நபி வழித் திடலில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் வடசென்னை மாவட்டம் பெரியார் நகர் கிளையின் சார்பில் கிளைத்தலைவர் அ.ரஹ்மான் தலைமையில் செயலாளர் அப்துர் ரஹீம், பொருளாளர் அசன் துணைத் தலைவர் அபு, துணைச் செயலாளர் பிலால், முன்னிலையில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் மாவட்ட பேச்சாளர் சகோதரர் கொளத்தூர் நிஜாம் அவர்கள் 'ரமலான் தரும் படிப்பினை' என்ற தலைப்பில் உரையாற்றினார். மற்றும் ஏராளமான முஸ்லீம் சகோதரர்கள் சகோதரிகள் கலந்து கொண்டனர்.
செய்திக்குறிப்பு, படங்கள்: திரு.அசன்