Kolathur Mail - Print Edition - October Special 2020

KM - Mpaper - Oct 20


Kolathur Mail • October Special 2020 Issue • Mpaper Version


  • Click the arrow icon in right top corner to view full screen
  • Optimised for mobile viewing - Electronic version of printed copy
  • Contact for advertisement 99624 55494



Kolathur Mail - Print Edition - October 2020

KM - Mpaper - Oct 20


Kolathur Mail • October 2020 Issue • Mpaper Version


  • Click the arrow icon in right top corner to view full screen
  • Optimised for mobile viewing - Electronic version of printed copy
  • Contact for advertisement 99624 55494



கபசுரக்குடிநீர் உண்மையும் மிகைப்படுத்துதலும் - சித்த மருத்துவர் பபிதா





இன்று கபசுரக்குடிநீர் அனைவராலும் பரவலாக பேசப்பட்டு வருகிறது. எந்த அளவிற்கு இதில் உண்மைத்தன்மை இருக்கிறதோ, மிகைப்படுத்துதலுக்கும் குறைவில்லை.

இம்மருந்து இன்று நேற்று கண்டறியப்பட்டதல்ல. பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பே சித்தர்களின் குறிப்புகள் உள்ளன. இன்றளவும் சளி, இருமலுடன் கூடிய காய்ச்சல், இளைப்பு போன்ற நோய்களுக்கு சிறந்த குணம் அளிக்கக் கூடிய மருந்து.

பன்றிக்காய்ச்சல் ஏற்பட்ட கால கட்டத்தில் இம்மருந்தை பயன்படுத்தி நல்ல பலன் கண்டதைத் தொடர்ந்து நவீன ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு நோய் கிருமிகளை எதிர்க்கும் தன்மை, நோய் தடுப்பாற்றலை மேம்படுத்தும் தன்மை, சுரத்தையும், வலியையும் போக்கும் தன்மைகள் கொண்டதாக ஆய்வுக் கட்டுரை 'International Journal of Current and Advanced Research' என்னும் இதழில் வெளியிடப்பட்டது.

இந்த குடிநீரில் நிலவேம்பு, சீந்தில், சுக்கு, ஆடாதோடை, வட்டத்திருப்பி போன்ற 15 மருந்துப் பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
இவ்வாறிருக்க Covid - 19 நோய்க்கிருமி தொற்றை தடுக்கும் அல்லது அழிக்கும் என்று எந்த சித்த மருத்துவ குறிப்புகளோ, ஆய்வுகளோ இருப்பதாக தெரியவில்லை.

இது நாம் வீட்டில் பயன்படுத்தும் துளசி கஷயாமோ, மிளகு கஷாயமோ அல்ல. இந்த குடிநீரை சித்த மருத்துவரின் ஆலோசனைப்படி எடுத்துக் கொள்வதே உகந்த ஒன்று.

குடிநீர் என்பது சுருக்கிக் குடிப்பது, சாதாரணமாக 8ல், 1ஆக (அ) 4ல் 1 ஆக வற்றவைத்து குடிக்க வேண்டும்.

ஆனால் சிலருக்கு 2ல் 1ஆக (அ) 3ல் 1 ஆக அவரது உடல்நிலை, நோய்நிலை பொருத்தும் வயதிற்கேற்ப மருந்தினளவும் மாறுபடும். உதாரணமாக 2-5 வயதுடைய குழந்தைகளுக்கு நாளொன்றிற்கு 5 மில்லி மட்டுமே கொடுக்க வேண்டும்.

இரண்டாவதாக, மருந்து சரக்குகள் கிடைப்பதிலுள்ள சிரமம். உதாரணமாக 'வட்டத்திருப்பி' இது பொன்முசுட்டை கொடியின் வேர். இது மலைப்பகுதிகளில் மட்டுமே கிடைக்ககூடிய ஒன்று.

அளவிற்கு அதிகமாக பயன்படுத்துவதால் மருந்திற்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

COVID - 19 நோய் பரவாமிலிருக்க நம் அரசு மற்றும் சுகாதாரத் துறை எளிமையான 3 விஷயங்களை பரிந்துரைத்துள்ளது.

1. வீட்டில் இருப்பது,
2. வெளியில் சென்றால் சமூக இடைவெளி கடைபிடிப்பது
3. அடிக்கடி கைகளை கழுவுவது

இதில் என்ன சிரமம்? இதைக் கடைபிடிப்பதில் எதற்கு மெத்தனம்?

'கபசுரக்குடிநீர்' நிச்சயமாக இதற்கான மாற்று கிடையாது. அன்றாட பழக்க வழக்கங்களிலும், நம் உணவு முறையிலும் சிறிய மாற்றங்களை கடைப்பிடித்தாலே நம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்த முடியும். இதனை மற்றுமொரு தனி பகிர்வாக உங்களிடம் பகிர்கிறேன்.



Dr.V.பபிதா B.S.M.S., M.Sc Varma
மாருதி சித்தா கிளினிக்
கொளத்தூர், பெரவள்ளூர்

நானும் கொளத்தூரும் 9 - திரு.ஜெகன்னாதன், டீச்சர்ஸ் காலனி






நான் சென்னையை அடுத்த பாடி அருகில் மண்ணூர்பேட்டை கிராமத்தில் 1942ம் வருடம் விவசாயக் குடும்பத்தில் பிறந்தேன். மிக அருகில் இருந்த ஒரே உயர்நிலைப்பள்ளி வில்லிவாக்கம் சிங்காரம் பிள்ளை உயர்நிலைப்பள்ளியில் பயின்றேன். பின்னர் 1962 ஆம் ஆண்டு இந்திய வான்படையில் சேர்ந்து 15 வருடங்கள் சீரிய பணியாற்றினேன். இருபெரும் போர்களை சந்தித்தேன். 1971ல் ஜலந்தர் ஏர் பேஸில் கடும் தாக்குதலில் புனர் ஜென்மம் பெற்றேன். பின்னர் வடகிழக்கில் கவுகாத்தியில் கரடுமுரடு, காடு, மலை, மிகப்பெரிய நதியான பிரம்ம புத்திராவின் ஓர் கோடியில் பணியாற்றினேன். அதற்காக பதக்கமும் தந்தார்கள்.

1978ல் புதிய வாழ்க்கையை சென்னை துறைமுகப் பகுதியில் எஃப்.சி.ஐயில் சேர்ந்தேன். 25 வருடங்கள் கப்பல் இறக்குமதி பல லட்சம் டன் உணவு தானியம் இறக்குமதி அல்லும் பகலும் என ஷிப்ட் முறையில் உழைத்தேன். 1985 வாக்கில் டீச்சர்ஸ் காலனியில் இருந்த 30 பேரில் நானும் ஒருவன். அப்போது தெருவிளக்கும் பேருந்து வசதியும் கிடையாது. இன்றைய இன்னர் சுற்றுவட்டப்பாதை 1990, 92 வாக்கில் உதயம் ஆனது. பின்னர் படிப்படியாக அக்கம் பக்கம் நகரங்கள் பெருகின. மக்கள் தொகை பெருகப் பெருக வசதிகள் பெருகின. பெரிய பெரிய பாலங்கள், விளக்குகள், போக்குவரத்துகள் என பெருகின.

இவ்விடத்தின் மிக அருகில் தேசிய நெடுஞ்சாலைகள் நாற்புறமும் சூழப்பட்டதால் கடந்த 25 வருடங்களில் போட்டா போட்டிகளில் இடங்கள் விற்கப்பட்டதாலும், மாதவரம் நகராட்சியாக மாறியதாலும் மென்மேலும் வளர்ச்சிகள் கண்டது. எங்கள் இருப்பிடத்தில் ஸ்ரீ பவானி அம்மன் ஆலயம், பிரதிஷ்டை ஆன காலம் முதல் எனக்கு ஈடுபாடு.

பாரதியாரின் கனவுகளில் பெண்களின் மேம்பாடு ஓர் முக்கிய அம்சம். கல்விகள் பெருகின. கணிணிமயம் வெகுவாக கவர்ந்தது. செல்லிடைப் பேசிகள் வளர்ந்தன. தொழிற்கூடங்களில் உரிமை அதிகம் காணும் மக்களைப் பார்க்கிறேன். மக்களின் சராசரி வருமானம் உயர்வானது. எனவே மண்ணும், பொன்னும் தானாகவே விலையேறின.

குளங்கள் நிறைந்த குளத்தூர் கொளத்தூர் என மறுவியது. பெயருக்கு ஏற்ப, கொளத்தூரில் வண்ண மீன்கள், தொட்டிகள் என அமோக விற்பனையில் உள்ளார்கள்.

எண்ணித்துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு இதுவே என் வாழ்நாளின் தத்துவம்.. என் பணிகள் தொடரட்டும், தொடரப்படவேண்டும்.


கொளத்தூர் மெயில், செப் 2017 இதழில் பிரசுரமான கட்டுரை

Kolathur Mail - Mpaper - March 2020

KM - Mpaper - Mar 20


Kolathur Mail • March 2020 Issue • Mpaper Version


  • Click the arrow icon in right top corner to view full screen
  • Optimised for mobile viewing - Electronic version of printed copy
  • Contact for advertisement 99624 55494



Kolathur Mail Margazhi Sangamam




கொளத்தூர் மெயில், மார்கழி சங்கமம் எனும் இசை, நாட்டிய நிகழ்ச்சியை கடந்த ஜனவரி 5ம் தேதி நடத்தியது. இந்நிகழ்வில் கொளத்தூர் மற்றும் சுற்றுவட்டாரத்தைச் சார்ந்த இசைப் பள்ளிகள், நடனப் பள்ளிகள் மற்றும் அகொடெமிக்கள் பங்கேற்றன.
வசந்தம் ஆர்ட்ஸ் அகாடெமி, விவேகானந்தா மெயின் ரோடு, சாய் சங்கரா அகாடெமி டீச்சர்ஸ் காலனி, சித்ரமயா ஸ்கூல் ஆப் ஆர்ட்ஸ், கடப்பா ரோடு, விரிட்டி அகாடெமி, விவேகானந்தா மெயின் ரோடு, உத்கிதா ஆர்ட்ஸ் அகாடெமி, பாபா நகர், வில்லிவாக்கம், சிவா கலா நர்த்தனாலயா ஆகிய ஆறு இசை, நடன பள்ளிகளைச் சார்ந்த மாணவர்கள் கலந்து கொண்டு தங்களது சங்கீத, நாட்டிய கலைத்திறனை வெளிப்படுத்தினர்.
கடப்பா ரோடில் உள்ள ஸ்ரீவாரி பார்ட்டி ஹாலில் இந்நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
அகாடெமி உரிமையாளர்களுக்கும், பயிற்றுனர்கள் மற்றும் பங்கேற்ற மாணவமணிகள் அனைவருக்கும் கொளத்தூர் மெயில் சார்பில் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. சென்னையின் மற்ற இடங்களில் நடைபெறும் இதுபோன்ற இசை நிகழ்ச்சியடுத்து கொளத்தூரில் முதன்முறையாக உள்ளூர் செய்தித்தாள் ஒருங்கிணைப்பில் சுற்றுவட்டாரத்தின் இசைப்பள்ளிகள் பங்கேற்க மார்கழி மாதத்தில் ஒரு இசை சங்கமம் நிகழ்வு நடைபெறுகிறது குறிப்பிடத்தக்கது.


Kolathur Mail Margazhi Sangamam

Kolathur Mail - Mpaper - January 2020

KM - Mpaper - Jan 20


Kolathur Mail • January 2020 Issue • Mpaper Version


  • Click the arrow icon in right top corner to view full screen
  • Optimised for mobile viewing - Electronic version of printed copy
  • Contact for advertisement 99624 55494



Kolathur Mail Marghazi Sangamam



Kolathur Mail Marghazi Sangamam
05.01.2020
Photo Album